நேத்து “ஸ்டார் பஜார்” போயி ஏதாவது வாங்கலாம்னு போனா , (என்ன வாங்கறதுன்னு தெரியாமத்தானே நிறையப்பேரு போறாங்க) ஒண்ணு கூட வாங்கத்தோணல. ஏன்னு கேட்குறீங்களா? . என்னோட அளவுக்கு XXL டீ-சட்டை கேட்டா அந்த மாதிரியெல்லாம் விக்கறது இல்லன்கறான். “ஒன்லி small, medium , large” அடங்க அப்ப பெரும்பாலான இந்தியனோட கதி (நான் urban இந்தியன சொன்னேங்க) , சரி போவட்டம்னு மளிகை சாமானெல்லாம் வாங்கலாம்னு பாத்தா , நம்மள கண்டுக்கறதுக்கு ஆளையே காணோம். ஒருத்தன புடிச்சு பருப்பு, சீரகம், கடுகு எங்கப்பான்னு கேட்டா எல்லாம் அவனோட (ஸ்டார்) பிராண்டு சொந்த பொட்டலம் , நம்ம அயிட்டம் உதயம் , ஆச்சியைக்காணோம், இதேதான் சமையல் எண்ணெய்க்கும் , வந்ததுக்கு பசங்க சாக்லெட் கொஞ்சம் வாங்கிச்சுங்க. அத தவிர ஜூஸ் மெஷின்னு 558 ( பாரிஸ் கார்னர்ல 220)! ஒரு பொட்டி போடற மெஷின்னு அது இதுன்னு 985 ஆயிடுச்சு . கடைசியா நொந்து போயி கீயுவுல ரொம்ப நெரம் நின்னு பில்லு போட்டு ஆயிர ரூவா நோட்ட நீட்டுனா , சில்லர கொடுன்னு கேக்குறா, அடிங்க ஒக்கா மக்கானு அவள ஒரு பாட்டு விட்டு பில்லு கேட்டா தூக்கி போட்டா பாருங்க , மனுசங்க எங்க நிக்கறாங்கன்னு தெரியாம. கோவம் தலைக்கி ஏறிடுச்சு… இனிமே இந்த மாதிரி மனுசங்கல மதிக்க தெரியாத கடைக்கு வரக்கூடாதுன்னு தீர்மானமா முடிவுபண்ணிட்டு கிளம்பினேன்.
அடுத்த நாளாவது திருந்தனும் இல்ல, பிக பஜார் போனா , அங்க நுழையும்போதே பார்த்தேன் , பெரிய கியு பில் போட. சும்மா அப்படியே ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வெளியே வந்தாச்சு.
இந்த இரண்டு கடை அனுபவத்திலிருந்து ஒண்ணு நல்லா தெரியுது “மதியாதார் வாசலை மிதியாதேன்னு” ஒரு பயலும் நம்மள கண்டுக்க மாட்டங்கறான். கடை மட்டும் பெரிசா இருக்கு , சலுகை என்கிற பேர்ல வருச முழுக்க சலுகைதான். இத வச்சி எவ்வளவு நாள் மக்கள ஏமாத்துவாங்கன்னு தெரியல. மனுசன , மனுசன மதிச்சா நல்லாயிருக்கும். வழக்கம் போல நம்ம அண்ணாச்சி கடைக்கு போன நல்ல கவனிப்பு இருக்கும் , அத விட்டுட்டு, இந்த பியாணி, டாடா, பிர்லா, அம்பானி இவங்களுக்கெல்லாம் நம்மல கண்டுக்க நேரம் இருக்குமா!